ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 50 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தாக்கம் காரமாக நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு தடைச் சட்டத்தை மீறியவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இதற்கமைய நாடு முழுவதும் தற்போதுவரையில் 50 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அதே நேரம் ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த குற்றச்சாட்டில் 12 ஆயிரத்து 975 வாகனங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
Post a Comment