உலக பிரபல்யம் வாய்ந்த பேஸ்புக் நிறுவனத்தின் ஊழியர்களில் பெருமளவிலானவர்கள் வீட்டிலிருந்து தொழிலைத் தொடர்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேஸ்புக் நிறுவனத்தில் சுமார் 48268 பேர் தொழில் செய்கின்றனர்.
நிலவிவரும் கொரோனா அச்சுறுத்தலினால் அவர்கள் அனைவருமே கடந்த மார்ச் மாத இறுதியிலிருந்து வீட்டிலிருந்தே தொழிலைத் தொடர்வதற்குப் பணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல நாடுகளிலும் உள்ள பேஸ்புக் நிறுவனக் கிளைகள் தற்சமயம் மூடப்பட்டுள்ளதோடு அவற்றில் பெருமளவிலான கிளைகள் வரும் ஜுலை 6ஆம் திகதியே திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் வீட்டிலிருந்து வேலை செய்வோருக்கு மீள அழைப்பு இதுவரை விடுக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
Post a Comment