நெடுந்தீவில் வெற்றிலை பாக்குகளுக்குத் தடை - வர்த்தகர்களும் பொது மக்களும் எழுப்பியுள்ள கேள்வி - Yarl Voice நெடுந்தீவில் வெற்றிலை பாக்குகளுக்குத் தடை - வர்த்தகர்களும் பொது மக்களும் எழுப்பியுள்ள கேள்வி - Yarl Voice

நெடுந்தீவில் வெற்றிலை பாக்குகளுக்குத் தடை - வர்த்தகர்களும் பொது மக்களும் எழுப்பியுள்ள கேள்வி

யாழ். குடாநாடு முழுவதிலும் விற்பனை செய்யப்படும் வெற்றிலை பாக்கு நெடுந்தீவில் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டு கொழுத்தப்படுவதாக அப்பகுதி வர்த்தர்களாலும் பொது மக்களாலும் கவலை தெரிவிக்கப்படுகின்றது.

நெடுந்தீவில் உள்ள வர்த்தக நிலையங்களில் விற்பனைக்காக வெற்றிலை  பாக்கு இருப்பின் பொதுச் சுகாதார உத்தியோகத்தர் அவற்றினை பறிமுதல் செய்வதாகவும் அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் பொருட்களை நீதிமன்றிலும் முற்படுத்தாது பிரதேச சபையின் தவிசாளர் முன்பாகவே தீயிட்டு எரிக்கப்படுகின்றது.

யாழ். நகர்ப் பகுதியில் நூற்றுக் கணக்கான வெற்றிலை கடைகளிலும் குடாநாட்டின் சகல சந்தைகளிலும் அனுமதிக்கப்படும் குறித்த வர்த்தகம் நெடுந்தீவில் மட்டும் மறுக்கப்படுவது தொடர்பில் மாவட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கேட்டுள்ளனர்.

இது தொடர்பில் நெடுந்தீவு சுகாதார உத்தியோகத்தரின் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவான வேலணை சுகாதார வைத்திய அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்டால் சட்டத்தின் பிரகாரம் வெற்றிலை  பாக்கு விற்பனை செய்ய முடியாது. ஆனால் ஏனைய உத்தியோகத்தர்கள் அதனை நடைமுறைப்படுத்துவது கிடையாது. இருப்பினும் நெடுந்தீவு உத்தியோகத்தர் அமுல் செய்கின்றார். எனப் பதிலளித்தார்.-


0/Post a Comment/Comments

Previous Post Next Post