சர்ச்சையில் சிக்கியுள்ள சுமந்திரன் இழைத்த தவறு என்ன? சிவஞானம் விளக்கம் - Yarl Voice சர்ச்சையில் சிக்கியுள்ள சுமந்திரன் இழைத்த தவறு என்ன? சிவஞானம் விளக்கம் - Yarl Voice

சர்ச்சையில் சிக்கியுள்ள சுமந்திரன் இழைத்த தவறு என்ன? சிவஞானம் விளக்கம்

சர்ச்சையில் சிக்கியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இழைத்த தவறு என்ன என்பது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் சீ.வீகே.சிவஞானம் கருத்து வெளயிட்டுள்ளார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது..

சிங்களப் பேட்டியை முழுமையாக நான் பார்த்துள்ளேன். ஓரளவிற்கு சிங்கள மொழி அறிவு உள்ளவன் என்ற அளவில் சில விடயங்களை சரியாகவே கையாண்டுள்ளார் என்றே கருதுகின்றேன். ஏனெனில் அந்தப் பேட்டியில் கேள்வியை கேட்பவரின் அனுகுமுறை குறுக்கு விசாரணையில் தொனியில் தான் இருந்தது.

நானாக இருந்தால் அதே பாணியில் பதிலளித்திருப்பேன். ஆனால் சுமந்திரனின் உள்ள தவறு என்னவெனில் கேள்விக்கு முழமையாக பதிலளித்திருந்தால் சர்ச்சைக்குள் மாட்டியிருக்க மாட்டார். அந்தப் பேட்டியில் அரசியல் போராட்டம் ஆயுதப் போராட்டத்துடன் உடன்படுகிறீர்களா என்று கேட்டகப்படுகிறது. அதற்கு மூன்று சொல்லில் நான் உடன்படவில்லை என்று சுமந்திரன் கூறயுள்ளார்.

அதில் இரண்டையும் சுமந்திரன் மறுதலித்தது தான் தவறானது. அதன் பின்னர் ஆயுதத்துடன் உடன்படவில்லை. அகிம்சைவாதி என விளங்கப்படுத்த போய் தான் சர்ச்சைக்குள் சிக்கியுள்ளார். அதன் பின்னர் ஆயுதப் போராட்டம் அரசியல் என இரண்டையும் பேசியிருந்தால் சிக்கல் வந்திருக்காது. அவர் தனது தனpப்பட்ட கருத்தை புகுத்தியதால் தான் சிக்கல் வந்தது.

உண்மையாகவே அவர் முன்னெடுத்தது ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையும் சொல்லாமல் தவிரத்திருக்கலாம். அதனைச் சொல்லாமல் விட்டதால் தான் சர்ச்சைக்குள்ளே சுமந்திரன் மாட்டிக் கொண்டார் என நான் நினைக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரையில் புலிகளோடு இனைந்து செயற்பட்டவன் அவர்களை ஆதரித்தவன் என்ற வகையில் புலிகள் அரசியல் போராட்டத்தையும் ஆயுதப் போராட்டத்தையும் சமாந்தமரமாக முன்னெடுத்தனர். ஆகவே இந்த விடயங்களை நாங்கள் தெளிவாக சொல்ல முடியும்.

பேட்டியில் சில விடயங்களுக்கு சுமந்திரன் பதில் சொல்ல போக பலவிதமான விமர்சனம் வந்தது உண்மை தான.; அத்தகைய பதில்களை அவர் தவிரத்திரக்கலாம் என்பது எனது முதலாவது கருத்து. இரண்டாவதாக் வன்முறைக்கு எதிரானவர் என்ற கருத்தை உள்ளடக்காமல் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லியிருக்கலாம். அதை வைத்தக் கொண்ட அவரை கட்சிக்குள்ளும் வெளியிலம் தற்போது குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஆதற்காக அவரை நீக்க வேண்டுமென்ற கருத்தோடு நான் உடன்படவில்லை. அப்படியான செயற்பாடுகள் முன்பும் கூட்டமைப்பிற்குள் நடக்கவில்லை. தொடர்ந்தும் வைத்திருந்த வரலாறும் உள்ளது. ஆகவே வேண்டுமானால் சுமந்திரன் தனியாக இந்த விடயங்களில் ஒரு முடிவை எடுக்கலாம். கட்சியாக நீக்குவது பொருத்தமானதாகபடவில்லை.

ஆனால் கூட்டமைப்பின் பேச்சாளராக இருந்த கொண்டு தேசியத் தலைவரின் ஆயுத அரசியல் போராட்டத்தோடு உடன்படவில்லை என்று சொன்னது தவறானது. அவ்வாறான கருத்தை அவர் தெரிவிக்காமல் இருந்திருக்கலாம் என்பது தான் என்னுடைய கருத்து .

சுமந்திரனின் நிலைப்பாடு இந்தவிடயத்தில் கூட்டமைப்பின் நிலைப்பாடு அல்ல. Ngபட்டி எடுத்தவர் இனவாதி. குறுக்கு விசாரணையில் நடத்தியர் போன்றே அவர் செயற்பட்டிருக்கின்றார். ஆனாலும் அந்தப் பேட்டியில் சுமந்திரன் கூறியவை அவரது தனிப்பட்ட கருத்து தான். அவர் பேச்சாளராக இருந்த கொண்டு அப்படி சொல்லக் கூடாது. ஆனால் அவரின் கருத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு கூட்டமைப்பை குற்றம் சொல்ல முடியாது.

கூட்டமைப்பு தலைவரால் உருவாக்கப்பட்ட கட்சி வளர்க்கப்பட்ட கட்சி. இன்றைக்கும் தந்தை செல்வநாயகம் ஆரம்பிக்கப்பட்ட அகிம்சை பேராட்டம் தேசிய தலைவர் ஆயுதப் போராட்டம் நாங்கள் இராஐநதந்தி வடிவங்கள் மாறினாலும் இலக்கு ஒன்றாகவே இருக்கும். எனவே கூட்டமைப்பை யாரும் தவறாக சித்தரிக்க முடியாது. சித்தரித்தால் தவறானது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post