கூட்டமைப்பின் மீதும் குற்றம் சுமத்துபவர்கள் யார்? ஏன் சுமத்துகின்றனர்? மாவை வெளியிட்டுள்ள தகவல் - Yarl Voice கூட்டமைப்பின் மீதும் குற்றம் சுமத்துபவர்கள் யார்? ஏன் சுமத்துகின்றனர்? மாவை வெளியிட்டுள்ள தகவல் - Yarl Voice

கூட்டமைப்பின் மீதும் குற்றம் சுமத்துபவர்கள் யார்? ஏன் சுமத்துகின்றனர்? மாவை வெளியிட்டுள்ள தகவல்

வெற்றுக் கோதுகளாக செயற்படுவர்களே கூட்டமைப்பின் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்துவதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

பிரமருடனான சந்திப்பின் பின்னர் கூட்டமைப்பின் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..

 பிரதமர் அழைத்ததால் நாம் சென்று எமது மக்களின் நலன்களின் அடிப்படையில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தேவைகள் குறித்தும் இனப்பிரச்சனைக்கான தீர்வு குறித்தும் வலியுறுத்தியிருக்கின்றோம். எந்தவித ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை. எந்தவித உடன்படிக்கையும் எங்களுக்ககுள் கிடையாது.

இவ்வாறு குற்றம் சுமத்துகின்ற தரப்பினர்களுக்கு மக்கள் குறித்து அக்கறையில்லை. மக்களது பிரச்சனைகள் தேவைகளைத் தீர்ப்பதற்கான அனுகுமுறை கிடையாது அல்லது தெரியாது. இவை தொடர்பான நிகழ்சசி நிரல் கிடையாது. அவ்வாறனவர்கள் இவ்வாறு வேண்டுமென்று குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவார்கள்.

ஆகவே தமிழ் மக்களின் பிரச்சனைகள் தேவைகளை நிறைவேற்ற எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கப் போகின்றீர்கள் என்று கேட்டால் அவர்களிடம் பதில் இருக்காது. ஏனெனில் அவர்கள் வெறும் வெற்றுக் கோதுகளாகவே செயற்படுகின்றனர்.

குறிப்பாக பாராளுமன்றத்தை மீளக் கூட்டுங்கள். நாங்கள் நாங்கள் ஆரிதிக்கிறோம். தோற்கடிக்க மாட்டோம். எதிர்க்கமாட்டோம் என்று எல்லாம் சொன்ன போது ஒரு வார்த்தையேனும் எவரும் விமர்சிக்கவில்லை. ஆனால் இப்பொழுது நாங்கள் கூட்டமைப்பாக போனவுடன் வெற்றுத் தனமாக நிகழ்ச்சி நிரல் அற்ற முறையில் வஞ்சகத்தனமாக பொறாமைத்தனமாக அல்லது மாற்று வழி என்ன என்பதைக் கொண்டிருக்காத கட்சிகள் இவ்வாறு விமர்சிப்பதில் நாங்கள் பெரும் அக்கறை செலுத்தவில்லை.

அதற்கான பதிலை மக்கள் நிச்சயமாகக் கொண்டிருப்பார்கள். அதை நாங்கள் இப்போது பதிலாக சொல்ல விரும்பவில்லை. நாங்கள் எந்த நம்பிக்கையோடும் இந்தச் சந்திப்பைக் கொண்டிருக்கவில்லை. ஆனால்; இந்தச் சந்தர்ப்பத்தில் உலகமே அழிவுப் பாதையில் நிற்கின்ற நேரத்தில் இலங்கையில் தமிழ் மக்களும் பாதிப்படைந்திருக்கின்ற நிலையில் என்னதைச் சொல்ல வேண்டுமோ அல்லது செய்ய வேண்டுமோ அதையே நாங்கள் செய்துள்ளோம்.

ஆப்பொழுது எல்லாம் எழாத விமர்சனங்கள் இப்பொழுது வருகிறதென்றால் அது அவர்களுடைய சொந்த நலன்களை அடிப்படையாகக் கொண்டதாகத் தான் இருக்கும்;. ஆனால் மிகப் பெரும்பாலும் ஆற்றல் அறிவு படைத்தவர்கள் இராஐதந்திர வட்டாரத்திலுள்ளவர்கள் என எல்லோருடனும் ஆராந்து தான் நாங்கள் ஒரு திர்மானத்தை எடுத்தோம். அது எங்கள் கட்சிக்குரிய தீர்மானம் கட்சியால் கடைப்பிடிக்க வேண்டிய உபாயம்.

எதிர்காலத்தில் ஒரு வேலைத் திட்டம் இருக்க முடியுமா என்ற கேள்வி எழுந்தால் அதற்கான அடித்தளமாகவும் இந்தச் சந்திப்பை பயன்படுத்த வேண்டியதாக அமையும். உலக சந்தர்ப்பத்திலும் இன்றைக்கு இருக்கின்ற நிலைமையிலும் அவர்கள் அழைத்ததும் நாங்கள் சமர்ப்பித்ததும் அதில் அவர்கள் அக்கறை கொண்டு இருப்பதாகச் சொல்வதும் அந்தச் சந்தர்ப்பதை பயன்படுத்த வேண்டிய பொறுப்பு எங்களிடம் இருக்கிறது.

இவ்வாறான குற்றச்சாட்டக்களைச் சுமத்துபவர்களுக்கு அது தான் தெரிந்தால் அதைப்பற்றி அவர்கள் சொல்வதில் நாங்கள் கவலைப்படவில்லை. நாட்டில் தேர்தல் ஒன்று வரப்போகிறது தான்.  தேர்தலுக்கு முன்னர் எந்த விடயங்களை பேச வேண்டுமோ அதை நாங்கள் பேசியுள்ளோம்.

ஆகவே அப்போது தேர்தல் வருகின்ற போது தேர்தலபை; பற்றி அந்த நேரத்தில் பேசலாம். இப்போது பேசுவது தேர்தலைப ;பற்றியது அல்ல. இதை நாங்கள் தெளிவாகவே சொல்லியுள்ளோம். இப்பொழுது கொரோனா பாதிப்பால் உயிர் அழிக்கப்படுகிறது. இந்த நாட்டிலே யுத்த காலத்திலும் சரி சுனாமியிலம் சரி பல பிரலயங்கள் வந்த காலத்திலும் சரி இந்த நாடு அழிவடைந்து வந்ததை நாங்கள் அறிவோம்.

ஏங்கள் இனப்பிரச்சனை தீர்க்கப்படவில்லை. அதற்காக பல இலட்சக்கணக்கான உயர்கள் பலி கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த சந்தர்ப்பத்தில் தேர்தலிற்கு முக்கியத்தவம் கொடுத்த பேசிக் கொண்டிருப்பது அரத்தமற்றது. முதலில் எது எடுக்கப்பட வேண்டுமோ எதை குறித்து தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமோ அதை நாங்கள் பேசியிருக்கிறோம்.

எதிர்க்கட்சிகளின் அறிக்கையின் மூலம் அரிசிற்கு சொல்லியதை நாங்கள் நேரில் சொலல சந்தர்ப்பம் கிடைத்த போது அதனை வற்புறுத்தியிருக்கிறோம். அதன் பிரகாரம் புதிய அனுகல் முறையின் அடிப்படையில் இந்த நாட்டின் அரசிடத்தே ஏற்றுக் கொள்ளப்படுமானால் நாங்களும் ஒரு புதிய அனுகுமுறையை அது இனத்தின் விடுதலை உட்பட கொரோனோ வைரஸ் அல்லது எமது மக்கள் போரால் அழிந்திருக்கிற நிலைமையில் மீளக் கட்டியெழுப்ப வேண்டிய நிலையில் புதிய உத்தியோடு புதிய அனுகுமுறையாNடு புதிய உலக சந்தர்ப்பத்தோடு கையாளுவது தான் எங்களுக்கு ஏற்றதாக இருக்கும்; என்ற உறுதிப்பாட்டோடு தான் நாங்கள் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளோம்.

ஆனபடியால் தேர்தலைப் பற்றி பேசவில்லை. எவ்பொழுது தேர்தல் நடக்குமென்று இன்னமு; திடகாத்திரமான முடிவில்லை. இந்த நாட்டிலே அரசியலமைப்பிற்கு இல்லாமல் எந்த அரசியல் சட்டபூர்வ நியாயமும் இல்லாத ஒரு ஆட்சி இன்றைக்கு உருவாகியிருக்கிறது.

தேர்தல் அறிவிக்கப்பட்ட பொழுது அடுத்த நாள் கொரோனோ தாக்கம் தீவிரமடைந்ததால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. காலம் குறிக்கப்படாமல் இருக்கிறது. அரசாங்கமே நாட்டில் ஐனாதிபதி தெரீவு செய்யப்பட்டாலும் பாராளுமன்றத் கலைக்கப்பட்டால் மூன்று மாதங்களில் மீள கூட்டப்பட வேண்டுமென்ற ஒரு முறை இருந்தாலும் அதைச் செய்ய முடியாத ஒரு நிலைமை உள்ளது.

உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்பட்டது போல இலங்கையிலம் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் அதனைக் கட்டுப்படுத்தி அதற்கான தீர்வை காண வேண்டும். ஐனநாயகம் மீளக் கட்டியெழுப்பப்பட வேண்டும். ஐனாதிபதியினுடைய சர்வாதிகாரமோ அல்லது இரர்னுவத்தின் அதிகாரக் கட்டமைப்போ  மாற்றியமைக்கப்பட வேண்டும். ஐனநாயகத்தின் உச்ச அதிகாரத்தைக் கொண்டது பாராளுமன்றம் தான அதை அடைவதற்கு நாங்கள் கொண்டிருக்கும் அனுகுமுறை மிக சரியானது.

இவ்வாறான நிலைமைகள் இருக்கையில் இப்பொழுது நாங்கள் சென்று பேசியது தவறு என்று சொல்வது ஒரு அறிவலித்தனமான அல்லது கொள்கையற்ற சந்தர்ப்பவாதமான பேச்சாக அல்லது செயற்பாடாகவே பார்க்கிறோம். வரவிருக்கின்ற தேர்தலில் கூட நாங்கள் இவ்வாறு சென்று பேசியதை பாவித்து அதனை தமது தேர்தல் பிரச்சாரங்களுக்குப் பயன்படுத்தவதற்கான வார்த்தைகளாகத் தான் நான் அதனைப் பார்க்கின்றேன் என்றார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post