மகிந்த தலைமையில் நாளை முக்கிய கூட்டம் - ஐ.தேக மற்றும் த.தே.கூ பங்கேற்கும் என அறிவிப்பு - Yarl Voice மகிந்த தலைமையில் நாளை முக்கிய கூட்டம் - ஐ.தேக மற்றும் த.தே.கூ பங்கேற்கும் என அறிவிப்பு - Yarl Voice

மகிந்த தலைமையில் நாளை முக்கிய கூட்டம் - ஐ.தேக மற்றும் த.தே.கூ பங்கேற்கும் என அறிவிப்பு

இலங்கையின் பிரதமர் மகிந்த ராஐபக்சவிற்கும் முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நாளை திங்கட்கிழமை அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது.

இந்தச் சந்திப்பிற்கு முன்னாள் பாராளுமுன்ற உறுப்பினர்கள் 225 பேருக்கும் பிரதமர் அழைப்பு விடுத்துள்ள நிலையில் சில கட்சிகள் இதில் கலந்து கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளன. அதே நேரம் இன்னும் சில கட்சிகள் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன கலந்து கொள்ள உள்ளன. மேலும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும்  மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளன.

எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை மீளக் கூட்டுமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற நிலையில் அரசாங்கம் பாராமன்றத்தைக் கூட்ட தேவையில்லை என தெரிவித்து வருகின்ற நிலைமைியலையே அனைத்துக் கட்சி பாரர்ளுமன்ற உறுப்பினர்களுக்கான இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post