கிளாலி பகுதியில் 62 குடும்பங்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கல் - Yarl Voice கிளாலி பகுதியில் 62 குடும்பங்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கல் - Yarl Voice

கிளாலி பகுதியில் 62 குடும்பங்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கல்

கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிளாலி கிராமத்தில் தேவையுடைய 62 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகள்  வழங்கப்பட்டது. 

கல்விப் பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் அனுசரணையுடன் கனடாவின் மொன்றியலில்  வசிக்கின்ற ஜொலி ரவல்ஸ் நிறுவுனர் ஐயாத்துரை பரமேஸ்வரனின் தனிப்பட்ட   நிதியான சுமார் ஒரு லட்சம்  ரூபாவில் 62 குடும்பங்களுக்கு குறித்த உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. 

கல்விப் பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் பணிப்பாளர் இ.தயாபரன் மற்றும் சாவகச்சேரி பிரதேச சபையின் உபதவிசாளர் செ.மயூரன், சிந்தூரம் சுப்பர் மார்க்கெட் உரிமையாளர் வி.லவன் ஆகியோர் இணைந்து உணவுப் பொதிகளை வழங்கிவைத்தனர்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post