யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மீண்டும் பிசிஆர் பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பல்கலைகழக மருத்தவ பீடாதிபதி எஸ். ரவிராஐ் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்படும் பரிசொதனைகளால் கருமித் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும் அதனால் பரிசோதனை செய்யும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் வெளியாகி செய்திகளையும் அடியோடு மறுத்துள்ளார்.
சிலர் திட்டமிட்ட பிரச்சாரங்களை முன்னெடுத்து வந்ததாகவும் அந்தப் பிரச்சாரங்களில் எந்தவித உண்மையுமில்லை எனவும் தெரிவித்த ரவிராஐ் பல்கலைக்ககழகத்தில் சில பணிகளை முன்னெடுக்க வேண்டியிருந்த காரணத்தால் சில தினங்கள் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தற்போது இன்று முதல் மீண்டும் பரிசொதனை ஆரம்பிக்கப்பட்டள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment