தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் முன்னாள் தலைவர் மறைந்த ஸ்ரீ சபாரத்தினம் அவர்களின் 34 ஆவது நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த் தேசியக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன் போது சபாரத்தினத்தின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து சுடரேற்றி மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது.
இந் நினைவேந்தல் நிகழ்வில் கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் பிரசாரச் செயலாளர் ஜெ.ஜனார்தனன் உட்பட கட்சியின் பிரமுகர்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் கலந்து கொண்டனர்.
Post a Comment