தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பிரதமர் மகிந்த ராஐபக்சவிற்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இன்று மாலை நடைபெற்றது. இதன் போது தேனீர் விருந்ததுபசாரமொன்றையும் பிரதமர் கூட்டமைப்பிற்கு வழங்கியுள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் விசேட கூட்டம் ஒன்றிற்கு அலரி மாளிகைக்கு இன்று அழைத்து இருந்தார்
ஆயினும் இந்தக் கூட்டத்தை எதிர்க்கட்சிகள் பலவும் புறக்கண்ணித்து இருந்த நிலையில் கூட்டமைப்பு கலந்து கொண்டிருந்தது.
இந்தக் கூட்டம் இன்று காலை நடைபெற்று முடிந்த நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை மாலை தேநீர் விருந்து உபசாரத்திற்கு அழைத்தது இருந்தார்.
இதற்கமை இன்று மாலையில் கூட்டமைப்பிற்கும் பிரதமருக்கும் இடையில் விசேட சந்திப்பு இடம்பெற்று இருந்தமை குறிப்பபிடத்ததக்கது
Post a Comment