கொடிகாமம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த ஒருவர் யாழ் போதனாவில் உயிரிழப்பு - Yarl Voice கொடிகாமம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த ஒருவர் யாழ் போதனாவில் உயிரிழப்பு - Yarl Voice

கொடிகாமம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த ஒருவர் யாழ் போதனாவில் உயிரிழப்பு

கொழும்பில் இருந்து கொண்டு வரப்பட்டு கொடிகாமம் கெற்பேலி தனிமைபடுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் யாழ் போதனாவில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

 கொடிகாமம் கெற்பேலி தனிமைபடுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த பண்டாரநாயக்கா மாவத்தை கொழும்பு 12ஐ சேர்ந்த பாத்திமா அன்சி மொஹமட் சுல்தான் என்ற வயது 78 உடைய பெண்  ஒருவரே உயிரிழந்துள்ளார்.

கொரோனோ தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் கொழும்பிலிருந்து கொண்டு வரப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் கொடிகாமம் கெற்பேலி தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

அந்த முகாமில் இருந்த குறித்த வயோதிப பெண் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த 2 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசொதனைகளில் அவருக்கு கொரோனோ தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதன் பின்னர் சாதார விடுதிக்கு அவர் மாற்றப்பட்டிருந்தார்.

இந் நிலையில் அவருக்கு ஏற்பட்ட முட்டு காரணமாக அவர் இன்று யாழ் போதனாவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதே வேளை இவரின் குடும்பத்தினர் எல்லோரும் கொடிகாமம் மற்றும் பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர்.

ஆகையினால் உயிரிந்தவரின் சடலத்தை யாழிலுள்ள முஸ்லிம் மக்கள் பொறுப்பெடுத்து நாளை முஸ்லீம் மையவாடியில் அடக்க செய்ய உள்ளதாக கூறப்படுகின்றது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post