கொரோனா தொற்று சந்தேக நபர்களை வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற நோயாளர் காவு வண்யும், டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகின.
இந்தச் சம்பவம் யாழ்.தென்மராட்சி A9 வீதி மீசாலை புத்தூர் சந்திக்கருகாமையில் இன்று பிற்பகல் 2.40 மணியளவில் இடம்பெற்றது.
இரணைமடு விமானப்படையின் தனிமைப்படுத்தப் முகாமிலிருந்து கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மூவரை அழைத்து வந்த நோயாளர் காவு வண்டியும், டிப்பர் வாகனமுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியிருந்தன.
இதன்போது உயிர் சேதமோ காயங்களோ ஏற்பட்டிருக்கவில்லை.
அதனையடுத்து கொரோனா தொற்று சந்தேக நபர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
டிப்பர் வாகனத்தை தடுத்து வைத்துள்ள கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்
Post a Comment