இலங்கையில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் தொடர்பாக, அணியின் முன்னாள் வீரரான மஹேல ஜயவர்தன, தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
கிட்டத்தட்ட 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில், ஹோமாகமவில் சர்வதேச கிரிக்கெட் மைதானமொன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.
இந்த மைதானம் அமைவதற்கு பல முன்னாள் வீரர்கள் தங்களது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். இந்த பட்டியலில் மஹேல ஜயவர்தனவும் இணைந்துள்ளார்.
இதுகுறித்து மஹேல ஜயவர்தன தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘இலங்கையானது இப்போது இருக்கும் வசதிகளைக் கொண்டே ஏற்கனவே இரண்டு உலகக் கிண்ணத் தொடர்களை நடாத்தியுள்ளது.
உலகக் கிண்ண தொடரொன்றினை நடத்தும் வாய்ப்பு ஒன்றை பெற்ற பின்னர் ஐ.சி.சி. இடம் நிதியுதவி பெற்று மைதானங்களை நிர்மாணிப்பது தொடர்பில் யோசிக்க வேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.
Post a Comment