தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான சும்நதிரன் வெளியிட்டுள்ள கருத்தினால் ஏற்பட்டுள்ள சர்ச்சையைடுத்து பேச்சாளர் மாற்றம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழரசின் மூத்த துணைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கூட்டமைப்பின் நடாளுமன்றக் குழுவிற்கு ஒரு பேச்சாளரும் தமிழரசுக் கட்சிக்கு வேறு ஒரு பேச்சாளரும் என பேச்சாளர்கள் நியமிக்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.
சுமந்திரனின் கருத்து என்பது பாரிய சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது உண்மை தான். அது மறுக்க கூடியது அல்ல. அதற்கு மேல் நாங்கள் விவாதிக்க தேவையில்லை. முக்கள் தான் நீதிபதி. ஆவர்களே தீர்ப்பை கொடுப்பார்கள். தற்போது தேர்தல் வருகிறது தானே. ஆகையினால் எல்லாவற்றையும் சீர் தூக்கி பார்த்து தேர்தலிலே மக்கள் தீர்ப்பு எழுதுவார்கள்.
மேலும் உட்புசல் என்பது இல்லை. ஆனால் அந்தக் கருத்துடன் உடன்பட முடியாதவர்கள் அதனை எதிர்க்கின்றனர். ஐனநாயகக் கட்சி என்ற அடிப்படையில் சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அவை பெரிய அளவில் தாக்கம் செலுத்தாது.
இப்போது இந்த விடயத்திலும் கருத்த பரிமாற்றம் ஏற்பட்டுள்ளது உண்மை. அது பொது வெளியில் பேசப்பட்டதும் உண்மை தான். தோடர்ந்து கட்சிக்குள்Nயும் பேசப்படும். அவ்வாறு விவாதிக்கப்பட்டு இனக்கப்பாடு ஏற்படுமென்று நான் நம்:புகின்றேன்.
இத்தகைய நிலைமைகளின் பின்னராக தமிழரசுக் கட்சியிலோ கூட்டமைப்பிலோ மாற்றம் ஏற்பட வாப்யப்பு இல்லை. சுpல சில பிரச்சனைகள் ஏற்படுகின்ற போது அது குறித்து பேசப்படும். ஆதன் பின்னர் ஒரு முடிவெடுத்து ஒருமித்துச் செயற்படுகின்ற நிலைமை தான் கட்சிக்குள் இருக்கிறது.
குறிப்பாக தற்போது பேச்சாளராக உள்ள சுமந்தரனை அதில் நீக்க வேண்டுமென்று சொல்லப்படுகிறது. ஆனால் அது குறித்து எல்லாம் கட்சி தான் முடிவெடுக்க முடியும். ஆனாலும் பேச்சாளர் மாற்றம் என்று சொல்ல முடியாது. எல்லோரும் சேர்ந்து தான் முடிவெடுக்க வேண்டும்.
என்னைப் பொறுத்தவரையில் கூட்டமைப்பின் பேச்சாளர் எள்று ஒட்டுமொத்த நிலையை மாற்றி பாராளுமன்றக் குழுவின் பேச்சாளர் என்ற ஒருவரை மாற்றி தமிழரசுக் கட்சிக்கும் ஒரு பேச்சாளர் வைத்திருக்க வேண்டும் என்பது தான் ஆரோக்கியமாக இருக்கும்;. அது தான் இனிமேல் இப்படியான இடர்பாடுகளை தவிர்ப்பதற்கான வழிவகைகளாக இருக்குமென்று நான் பார்க்கிறேன்.
Post a Comment