சர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
அதன் போது பிரதான ஈகை சுடரினை மூத்த ஊடகவியலாளரும் அமையத்தின் தலைவருமான ஆ.சபேஸ்வரன் ஏற்றினார்.
அதனைத் தொடர்ந்து ஊடக அமையத்தின் பிரகடனம் ஊடக அமையத்தின் பொருளாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் செல்வகுமாரால் வெளியிடப்பட்டது.
Post a Comment