நாளை திங்கட்கிழமை தளர்த்தப்படும் ஊரடங்கு மீண்டும் புதன்கிழமை அமுல் - Yarl Voice நாளை திங்கட்கிழமை தளர்த்தப்படும் ஊரடங்கு மீண்டும் புதன்கிழமை அமுல் - Yarl Voice

நாளை திங்கட்கிழமை தளர்த்தப்படும் ஊரடங்கு மீண்டும் புதன்கிழமை அமுல்

கொழும்பு களுத்துறை கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளது.

பின்னர் இரவு 8 மணிக்கு மீள அமுலாக்கப்படவுள்ளதுடன் எதிர்வரும் 6ஆம் திகதிவரை முன்னர் போன்று இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமுலாக்கப்படவுள்ளது.

அந்த மாவட்டங்களில் எதிர்வரும் 6 ஆம் திகதி இரவு 8 மணிக்கு பிறப்பிக்கப்படும் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 11 அதிகாலை 5.00 மணி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post