யாழ்.வடமராட்சி கிழக்கில் சிறுமிகள் மீது பாலியல் துன்புறுத்தல்... - Yarl Voice யாழ்.வடமராட்சி கிழக்கில் சிறுமிகள் மீது பாலியல் துன்புறுத்தல்... - Yarl Voice

யாழ்.வடமராட்சி கிழக்கில் சிறுமிகள் மீது பாலியல் துன்புறுத்தல்...


யாழ்.வடமராட்சி கிழக்கு- குடத்தனை பகுதியில் இரு சிறுமிகளை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் தேடப்பட்டுவந்த 3 போில் ஒருவர் பருத்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 
குடத்தனை- பொற்பதி பகுதியில் கடந்த 10ம் திகதி 16, 17 வயதுடைய இரு சிறுமிகள் தமது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த நிலையில் அங்குவந்த 3 பேர் சிறுமிகளை அச்சுறுத்தியதுடன் நண்பர்களை துரத்திவிட்டு பாலியல்ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.
பின்னர் பொதுமக்களை அழைத்து அவர்களுக்கு முன்பாகவே கட்டிவைத்து பச்ச மட்டையால் அடித்தும் உள்ளனர். சிறுமிகள் இருவரும் தமது நண்பர்களுடன் தகாத உறவில் இருந்தனர் என்று கூறி பொலிஸாருக்கு அந்த இளைஞர்கள் மூவரும் தகவல் வழங்கியிருந்தனர். 
சிறுமிகளை மீட்ட பொலிஸார் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்த்தனர். சட்ட மருத்துவ பரிசோதனையில் சிறுமிகள் தமக்கு நடந்தவற்றை வாக்குமூலம் வழங்கியுள்ளனர். சட்ட மருத்துவ பரிசோதனையை முன்னெடுத்த சட்ட மருத்துவ அதிகாரி 
கனகசபாபதி வாசுதேவா, சிறுமிகள் இருவரும் பாலியல் ரீதியாக துன்புறுதலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர். என்று அறிக்கை வழங்கியிருந்தார்.இதனையடுத்து சிறுமிகளை துன்புறுத்திய மூவரும் பருத்தித்துறை பொலிஸாரால் தேடப்பட்டு வந்தனர். 
அவர்களில் ஒருவர் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் விசாரணைகளின் பின்னர் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர். ஏனைய இருவரும் தேடப்படுகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post