தன்மானமுள்ள தமிழன் ஒருபோதும் சோரம் போகமாட்டான் - சுமந்திரனை கடுமையாக சாடும் தவராசா - Yarl Voice தன்மானமுள்ள தமிழன் ஒருபோதும் சோரம் போகமாட்டான் - சுமந்திரனை கடுமையாக சாடும் தவராசா - Yarl Voice

தன்மானமுள்ள தமிழன் ஒருபோதும் சோரம் போகமாட்டான் - சுமந்திரனை கடுமையாக சாடும் தவராசா

சுமந்திரன் கருத்துக்கள் தமிழ் மக்களின் மனங்களில் ஆறாத காயத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரன் அண்மைய கருத்துக்கள் தமிழ் மக்களின் மனங்களில் ஆறாத காயத்தை ஏற்படுத்தியுள்ளது என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.
[ads id="ads1"]
அண்மையில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் விடுதலைப் புலிகளின் போராட்டம் தொடர்பில் சுமந்திரன் கூறிய கருத்துக்கள் சமகால அரசியல் பரப்பில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் இது குறித்து விசேட அறிக்கை ஒன்றின் ஊடாக ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா கேள்வி எழுப்பியுள்ளார். குறித்த அறிக்கையில்,

தமிழ் மக்களின் போராட்டத்துக்கு ஒரு வரலாற்றுக் காரணி இருக்கின்றது. அந்தக் காலகட்டத்தில் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறையினை எதிர்த்து போராட ஆயுதப்போரை வேறு வழியின்றி விடுதலைப்புலிகள் மட்டுமின்றி பல்வேறு தமிழ் இயக்கங்கள் தமது மக்களின் விடிவுக்காக ஆயுதப் போராட்டத்திற்குள் தள்ளப்பட்டனர்.

எந்தவொரு மக்கள் போராட்டமும் முதலில் இயக்க ரீதியில் ஆயுதம் தூக்கிய போராட்டமாகவும் பின்பு அதன தலைவர்கள் அரசியல் நீரோட்டத்தில் கலந்து கொள்வது நெல்சன் மண்டலோவிலிருந்து வடிவம் பெறுகின்றமை தவிர்க்க முடியாதது.

அந்தப் போராட்டத்திற்கு மக்கள் விடுதலை முண்னனிவரை சிறந்த உதாரணங்களாக இருப்பதை சுமந்திரன் அறியாதவரா? இத்தைகைய போராட்டங்களை கொச்சைப்படுத்தும் அதிகாரம் யாருக்கும் கிடையாது என்பதுடன் அவ்வாறான கருத்துக்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரன் கூறியுள்ளமை தமிழ் மக்களின் மனதில் ஆறாத காயத்தையும் வேதனையையும் உருவாக்கியுள்ளமை மிக வேதனைக்குரியது.

கடந்த 08-05-2020 அன்றைய நேர்காணல் காணொளியில் சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கள் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை தான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதுடன் தான் எந்தவொரு அரசியல்(விடுதலைப் புலிகளுக்கு) கைதிகளுக்கும் வாதாடவில்லையென கூறியதும் மக்கள் விடுதலை முன்னணிக்காக 90ம் ஆண்டுகளில் வாதாடியதாக தெரிவித்ததும் வேடிக்கையானது. தேசிய கொடியையும் தேசிய கீதத்தையும் தானும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் மட்டுமே ஏற்றுக்கொள்வதாக கூறியமை கட்சியின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களை வேறுபடுத்திக் காட்டுவதாக அமைந்துள்ளது.

தமிழ் மக்களின் விருப்பத்திற்கும் எதிர்பார்ப்புக்களுக்கும் நேர்மாறாக சுமந்திரன் செயல்படுகின்றார் என்பது வெளிப்படையாக தெரிகின்றது. அவருடைய கருத்துக்கள் தனிப்பட்ட கருத்தேயன்றி கட்சியினது கருத்து அல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை கூறியுள்ளபோதும் சுமந்திரனுடைய கருத்துக்கள தமிழ் மக்களிடையே. அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

பல ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளின் குற்றவியல் வழக்குகளில் நான்கு தசாப்தங்களாக எனது உயிருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் அனைத்தையும் பொருட்படுத்தாது எந்தப் பாதுபகாப்புமின்றி இந்த நிமிடம் வரையும் களத்தில் இருக்கும் நானும் சிங்கள மக்களுக்கு மத்தியில்தான் வாழ்ந்துவருகின்றேன்.
[ads id="ads2"]
ஒரு கோழை போன்று ஒருபோதும் நான் எவ்விதமான கருத்தியலுக்கும் அடிபணிந்து தமிழர் போராட்டத்தைக் காட்டிக்கொடுக்கும் விதத்தில் அல்லது கொச்சைப்படுத்தும் விதத்தில் சுய லாபங்களுக்காக கருத்துவெளியிட நினைத்தது கிடையாது. ஒரு தன்மானமுள்ள தமிழன் ஒருபோதும் யாருக்கும் சோரம் போக மாட்டான். சுமந்திரன் தனது கருத்துகளால் தமிழ் மக்களின் மனதை புண்படுத்தி இருக்கின்றார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கட்சியில் ஒரு பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கும் நபர் தனது வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இத்தகைய கருத்துக்களினால் தேர்தல் நெருங்கும் இவ் வேளையில் கட்சியின் நலனிற்கு எந்த வித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதே பிரார்த்தனையாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post