குணமடைந்த ஒருவருக்கு மீண்டும் கொரோனோ - வைத்தியசாலையில் அனுமதி - Yarl Voice குணமடைந்த ஒருவருக்கு மீண்டும் கொரோனோ - வைத்தியசாலையில் அனுமதி - Yarl Voice

குணமடைந்த ஒருவருக்கு மீண்டும் கொரோனோ - வைத்தியசாலையில் அனுமதி

கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பிய நபருக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டிருப்பது இன்று சனிக்கிழமை கண்டறியப்பட்ட செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கம்பஹா – ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டது மார்ச் 17ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவர் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் ஏப்ரல் 17ஆம் திகதி அவர் குணமடைந்து வீடு திரும்பியிருந்தார்.

இந்நிலையில் இன்று அவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டதில் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து மீண்டும் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post