தென்மராட்சி-மீசாலை சந்திப் பகுதியில் விபத்து.. - Yarl Voice தென்மராட்சி-மீசாலை சந்திப் பகுதியில் விபத்து.. - Yarl Voice

தென்மராட்சி-மீசாலை சந்திப் பகுதியில் விபத்து..

தென்மராட்சி-மீசாலை சந்திப் பகுதியில் 27/05 புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் -துவிச்சக்கரவண்டி விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

மீசாலை சந்தி ஊடாக  துவிச்சக்கரவண்டியில் சிறுவன் ஒருவன் ஏ9 வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில் யாழில் இருந்து கொடிகாமம் நோக்கி வந்த மோட்டார்சைக்கிள் மோதியதில் இவ் விபத்து சம்பவித்துள்ளது. 


இதில் துவிச்சக்கரவண்டியில் சென்ற 11வயதான மீசாலை தெற்கைச் சேர்ந்த தே.சச்சுதன்,மோட்டார் சைக்கிளில் பயணித்த தவசிகுளம் கொடிகாமத்தைச் சேர்ந்த 18வயதான அ.அஜேந்திரன்,மிருசுவில் தெற்கைச் சேர்ந்த 18வயதான லக்சன் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிட்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post