தேசிய அடையாள அட்டை வழங்கும் ஒருநாள் சேவை ஜூன் 22இல் மீள ஆரம்பம் - Yarl Voice தேசிய அடையாள அட்டை வழங்கும் ஒருநாள் சேவை ஜூன் 22இல் மீள ஆரம்பம் - Yarl Voice

தேசிய அடையாள அட்டை வழங்கும் ஒருநாள் சேவை ஜூன் 22இல் மீள ஆரம்பம்


தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் ஒரு நாள் சேவை எதிர்வரும் ஜூன் 22ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது என்று ஆள்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டில் கோரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு கடந்த மார்ச் 20ஆம் திகதி தொடக்கம் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகளை அடுத்து தேசிய அடையாள அட்டையை வழங்கும் ஒருநாள் சேவையும் இடைநிறுத்தப்பட்டது.
 
இந்த நிலையில் எதிர்வரும் ஜூன் 22ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் ஒரு நாள் சேவையை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்று ஆள்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post