யாழ்ப்பாணத்தில் 22தேர்தல் விதிமுறை மீறல் முறைப்பாடுகள் .. - Yarl Voice யாழ்ப்பாணத்தில் 22தேர்தல் விதிமுறை மீறல் முறைப்பாடுகள் .. - Yarl Voice

யாழ்ப்பாணத்தில் 22தேர்தல் விதிமுறை மீறல் முறைப்பாடுகள் ..



யாழ்ப்பாணத்தில் தேர்தல் அறிவிக்கப்படத்திலிருந்து இன்றுவரை ஒரு தேர்தல் வன்முறை சம்பவம் உட்பட 22தேர்தல் விதிமுறை மீறல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ்மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் கி.அமலராஜ் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்ட்தான் பின்னர் இன்றுவரை 22தேர்தல் விதி மீறல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளனஅவற்றில் பெரும்பாலான முறைப்பாடுகள் தேர்தல் சட்ட விதிகளை மீறியதற்கான முறைப்பாடுகள் ஆகும்எனினும் ஒரேயொரு தேர்தல் வன்முறை சம்பவம் பதிவாகியுள்ளதுஅது அண்மையில் தென்மராட்சியில் இடம்பெற்ற தனியார் ஊடக நிறுவன தாக்குதல் சம்பவம் பதிவாகியுள்ளதுஇதனை விட பாரிய சம்பவங்கள் எவையும் இதுவரை பதிவாகவில்லை.

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தினை கவனத்தில் எடுத்து அரசியல் கடசிகளும்சுயேட்சைக் குழுக்களும் சுகாதார முயறைகளை பின்பற்ற வேண்டும்அதேபோல வாக்காளர்களும் சுகாதார முறைகளை பின்பற்றுவது அவசியமானது ஒன்றாகும்தேர்தல் சட்ட விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள பதாகைகள் அகற்றப்பட்டுள்ளனநிவாரணப் பொருட்கள் வழங்கிவிட்டு வேட்ப்பாளர்கள் அதனை முகப்புத்தகத்தில் பதிவிடடாலும் அதுவும் தேர்தல் விதிமுறை மீறலே எனவே வேட்ப்பாளர்கள் தேர்தல் சட்டத்தை மதித்து ஜனநாயக தேர்தலுக்கு ஒத்துளைப்பு வழங்க வேண்டும் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post