இலங்கையில் இதுவரை 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - Yarl Voice இலங்கையில் இதுவரை 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - Yarl Voice

இலங்கையில் இதுவரை 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1789 ஆக அதிகரித்துள்ளது.

இன்று இதுவரை 40 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அந்தவகையில் இதுவரை அடையாளம் காணப்பட்டவர்களில் 939 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் உள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அத்தோடு மேலும் 03 பேர் பூரண சுகமடைந்துள்ள நிலையில், மொத்தமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியவர்கள் எண்ணிக்கை 839 ஆக காணப்படுகின்றது.

இலங்கையில் மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1782 ஆக அதிகரித்துள்ளது.

அந்தவகையில் இதுவரை அடையாளம் காணப்பட்டவர்களில் 931 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் உள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அத்தோடு இன்று 03.30 மணி நிலவரப்படி மேலும் 03 பேர் பூரண சுகமடைந்துள்ள நிலையில், மொத்தமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியவர்கள் எண்ணிக்கை 839 ஆக காணப்படுகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post