யாழ் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிற்கான கலந்துரையாடல் இன்று .. - Yarl Voice யாழ் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிற்கான கலந்துரையாடல் இன்று .. - Yarl Voice

யாழ் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிற்கான கலந்துரையாடல் இன்று ..



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில்  யாழ் மாவட்டத்தில்  நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிற்கான  கலந்துரையாடல் இன்று மாலை  மாட்டீன் வீதியில் உள்ள கட்சியின் தலமை செயலகத்தில் இடம்பெற்றது.

தமிழ் அரசுக் கட்சியில் 7 வேட்பாளர்களும் புளட் அமைப்பின் இருவருடன் ரேலோவைச் சேர்ந்த ஒருவருமாக கூட்டமைப்பின் 10 உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். 

குறித்த கலந்துரையாடலில் எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பிலும் அதற்கான பரப்புரைகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.

இதன்போது அதிக ஆசணங்களை பெறும் வகையில் செயல்படும் வழிவகைகளும் தற்போதைய கொரோனா அச்ச சூழலில் சுகாதார வழிவகைகளுடன் சந்திப்புக்களை மேற்கொள்வது தொடர்பாகவும் பிரஸ்தாபிக்கப்பட்டது.

கூட்டத்தில் தமிழ் அரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் எஸ்.எக்ஸ்.குலநாயகம் உள்ளிட்ட சில கட்சியின் மூத்த செயல்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மாணங்கள் தொடர்பாக கூட்டம் நிறைவுற்றதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post