நடிகை சமந்தா உலக வரைபடத்தை தனது வீட்டில் வளர்த்த செடியின் பூக்கள் மற்றும் இலைகளைக் கொண்டு வரைந்து அதன் ஒளிப்படத்தை வெளியிட்டுள்ளார்.
குறித்த ஒளிப்படத்தின் கீழ், “பச்சை என்பது நம்பிக்கை, குணப்படுத்துதல், உயிர்த்தெழுதல் ஆகியவற்றினை குறிக்கும் ஒரு நிறம்.
நாம் நம் வாழ்க்கையில் இந்த நேரத்தை திரும்பிப் பார்ப்போம். நாம் ஒருபோதும் ஒருவருக்கொருவர் கைவிடாத வகையில் நடந்து கொண்டு பெருமைப்படுவோம்” எனக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
மேலும் இலைகளால் உலக வரைபடத்தை உருவாக்க உதவி செய்தவர்களுக்கும் அவர் நன்றி கூறியுள்ளார். சமந்தாவின் இந்த சமூக வலைத்தளப் பதிவு வைரலாகி வருகிறது.
Post a Comment