நேபாளத்தின் புதிய வரைபடம்: மேலவையிலும் சட்டவரைபு நிறைவேற்றம்! - Yarl Voice நேபாளத்தின் புதிய வரைபடம்: மேலவையிலும் சட்டவரைபு நிறைவேற்றம்! - Yarl Voice

நேபாளத்தின் புதிய வரைபடம்: மேலவையிலும் சட்டவரைபு நிறைவேற்றம்!

சர்ச்சைக்குரிய புதிய வரைபடச் சட்டத்திருத்த வரைபை (The New Map Amendment Bill) நேபாள நாடாளுமன்ற கீழவையைத் தொடர்ந்து மேலவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு சொந்தமான உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள லிபுலேக், கலபானி, லிம்பியாதுரா ஆகிய பகுதிகளை (Lipulekh, Kalapani and Limpiyadhura in India’s Uttrakhand) தங்கள் நாட்டுக்குச் சொந்தமான பகுதியாக நேபாளம் உரிமை கொண்டாடி வருகிறது.
இப்பகுதிகளை உள்ளடக்கிய புதிய வரைபடத்தைத் தயாரித்து, நேபாள நாடாளுமன்ற கீழவையான பிரதிநிதிகள் சபையில் அந்நாட்டு அரசு அண்மையில் கொண்டு வந்து நிறைவேற்றியது.
இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் நேபாள நாடாளுமன்ற மேலவைக்கு அந்த சட்டவ ரைபு அனுப்பப்பட்டது. இதையடுத்து மேல் சபையிலும் சட்ட வரைபு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேல் சபையில் உறுப்பினர்கள் யாரும் சட்டவரைபை எதிர்க்கவோ அல்லது புறக்கணிக்கவோ இல்லையென்பதுடன் சபையின் 57 உறுப்பினர்களும் வரைபுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post