வரலாற்று சிறப்பு மிக்க அபிசேககந்தன் என அழைக்கப்படும் மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் காம்யோற்சவ மஹோற்சவத்தின் பெருந்திருவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
கருவரையில் வீற்று இருக்கும் ஸ்ரீ கந்தசாமி,வள்ளி,தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு 108 சங்காபிசேக கிரிகைகளும் விசேட அபிசேக ஆராதனைகள் என்ப இடம்பெற்றது.
இதனை தொடர்ந்து வசந்தமண்டவத்தில் அருள்பாலித்து இருக்கும் அபிசேகக்கந்தனுக்கும் வள்ளி,தெய்வானைக்கும் தீப ஆராதனை அர்ச்சனைகள் இடம்பெற்றதை தொடர்ந்து எம்பெருமான் மயில்வானத்தில் ஏறி உள்வீதிவலம் வந்து அருள்பாலித்தார்.
இவ் காம் யோற்ச பெருந்திருவிழா 25 நாள் காலை,மாலை விசேட பூஜைகள் என்பன இடம்பெற்று எதிர்வரும் மாதம் 19 ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும், மறுநாள் காலை ஆடி அமாவாசை அன்று கீரிமலை தீர்த்தகேணியில் தீர்த்தம்மாடிய பின் இனிதே பெருந்திருவிழா நிறைவடையும்.
இவ் பெருந்திருவிழாவினை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ இரத்தினசபாவதி குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்திவைத்தனர்.
தற்போது நாட்டில் எற்பட்டுள்ள கொரோனா வைரஸ் காரணமாக பெரும் அளவான பக்தர்கள் இவ் பெருந்திருவிழாவில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment