நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,047 ஆக உயர்ந்துள்ளது.
இவர்கள் அனைவரும் ஓமானில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும் இன்று மட்டும் கொரோனா தொற்று உறுதியானவர்களில் 33 பேர் குணமடைந்த நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கையும் 1,711 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது கொரோனா தொற்று உறுதியானவர்களில் 325 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதோடு 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment