யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் 476 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கடத்தலுக்காக பயன்படுத்தபட்ட தாக கூறப்படும் படகு என்ஜின் ஒன்றும் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..
யாழ்ப்பாணம் மண்டதீவு கடற்கரை பகுதியில் மர்மமான முறையில் படகு ஒன்று நின்றுள்ளது. அது குறித்த படகினை கடற்படையினர் சோதனையிட்டபோது படகுக்குள் சந்தேகத்துக்கிடமான முறையில் மூட்டைகள் கிடைத்துள்ளன.
குறித்த மூட்டைகளை கடற்படையினர் சோதனையிட்டபோது அதில் கஞ்சா போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.426 கிலோ எடையுள்ள கஞ்சா போதைப் பொருட்கள் கைப்பற்றப் பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் கடற்படையினரும் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் குருநகர் பகுதியில் வைத்து சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த படகு பயன்படுத்தபட்ட தாக கூறப்படும் எஞ்சின் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
Post a Comment