யாழில் அதிகரிக்கும் கெரோயின் போதைப் பொருள் பாவனை - தொடரும் கைதுகள் - Yarl Voice யாழில் அதிகரிக்கும் கெரோயின் போதைப் பொருள் பாவனை - தொடரும் கைதுகள் - Yarl Voice

யாழில் அதிகரிக்கும் கெரோயின் போதைப் பொருள் பாவனை - தொடரும் கைதுகள்

ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வைத்து யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..

குருநகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய இரு இளைஞர்களை போலீசார் சோதனையிட்ட போது அவர்களிடம் இருந்து 100 மில்லிகிராம் ஹெரோயின் பக்கெட்டுக்கள் இரு நபர்களிடமும் இருந்து மீட்கப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்கள் அனலைதீவு மற்றும் கல்வியங்காடு பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
--

0/Post a Comment/Comments

Previous Post Next Post