தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளராக இருந்த எம்.ஏ.சுமந்திரனின் பதவியில் மாற்றம் கொண்டு வருவதற்கு கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தன் இணக்கம் தெரிவித்திருக்கின்றார்.
கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன் போது கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியில் மாற்றம் ஏற்படுத்தி அதனை பங்காளிக் கட்சிகளிற்கு வழங்க வேண்டுமென பங்காளிகள் கோரியிருந்தன.
இந் நிலையில் அவ்வாறு மாற்றம் ஏற்படுத்துவத்கு கட்சியின் தலைவர் இரா சம்மந்தனும் இணக்கம் வெளியிட்டுள்ளார். மேலும் கூட்டமைப்பின் பேச்சாளராக இருந்த சுமந்திரன் மாற்றப்பட்டு அந்தப் பதவியில் ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனை நியமிப்பதற்கும் சிபார்சு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கூட்டமைப்பின் பாரர்ளுமன்ற கொறாடாவாக இருந்த சிறிதரன் மாற்றப்பட்டு அந்தப் பதவியில் புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனை நியமிப்பதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
இவ்வாறு கூட்டமைப்பின் முக்கிய பதவிகளில் மாற்றம் ஏற்படுத்துவதற்கு கட்சித் தலைமை இணக்கம் வெளியிட்டிருக்கின்ற போதும் அந்த மாற்றங்கள் குஙித்து உத்தியோகபூர்வமாக இதுவரையில் எந்த அறிவிப்புக்களும் விடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment