செல்வச்சந்நிதி ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பம் - சுகாதார நடைமுறைகளை பேணுமாறு அறிவித்தல் - Yarl Voice செல்வச்சந்நிதி ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பம் - சுகாதார நடைமுறைகளை பேணுமாறு அறிவித்தல் - Yarl Voice

செல்வச்சந்நிதி ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பம் - சுகாதார நடைமுறைகளை பேணுமாறு அறிவித்தல்

வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது 

அன்னதானக் கந்தன் விபூதி கந்தன் என அடியவர்களால் அழைக்கப்படும் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வு இன்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் அடியார்கள் புடைசூழ இடம்பெற்றது தற்போதையகொரோணா சூழ்நிலை காரணமாக  சுகாதார நடைமுறைக்கு ஏற்றவாறு க கொடியேற்றம் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது 

எனினும் ஆலயத்தில் அன்னதானம் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள தோடு ஆலயத்திற்கு வரும் அடியவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை பரிசோதனை செய்யப்பட்டு புகைப்படம் எடுக்கப் பட்ட பின்னரே ஆலயத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்எனினும் இன்றைய கொடியேற்ற நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது



0/Post a Comment/Comments

Previous Post Next Post