செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் யாழில் அனுஷ்டிப்பு - Yarl Voice செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் யாழில் அனுஷ்டிப்பு - Yarl Voice

செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் யாழில் அனுஷ்டிப்பு


செஞ்சோலைப் படுகொலையின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று வெள்ளிக்கிழமை காலை யாழிலும் அனுஷ்டிக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபம் முன்னாள் உள்ள தமிழராராச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத் தூபி முன்பாக நடைபெற்றது. 

முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கயேந்திரன் தலைமையில் நடைபெற்ற இவ் நினைவேந்தல் நிகழ்வில் கட்சியின் தலைவரும் பாரர்ளுமன்ற உறுப்பினருமான கயேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்டு சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தினார்.

 இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த கட்சியின் ஆதரவாளர்கள் உறுப்பினர்கள் பொது மக்களால் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. 


0/Post a Comment/Comments

Previous Post Next Post