வட கொரியாவின் முதல் பெண் ஜனாதிபதி கிம் யோ ஜாங்? - Yarl Voice வட கொரியாவின் முதல் பெண் ஜனாதிபதி கிம் யோ ஜாங்? - Yarl Voice

வட கொரியாவின் முதல் பெண் ஜனாதிபதி கிம் யோ ஜாங்?

வடகொரியாவின் ஜனாதிபதியும் சர்வாதிகாரியுமான கிம் ஜாங் உன்னின் உடல் நிலை குறித்த மாறுபட்ட தகவல்கள் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

அளவுக்கு அதிகமாக மாமிசம் மற்றும் மது சாப்பிட்டதால் அவரது உடல் நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் இதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட போது கிம் ஜாங் உன் கோமாவுக்குச் சென்றுவிட்டார் என்று தகவல் பரவியதையடுத்து அவரது புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியிடப்பட்டன. 

ஆனால் அந்த வீடியோக்கள் போலியானவை என்று தென்கொரியாவைச் சேர்ந்த புலனாய்வுத் துறை அறிவித்தது சர்ச்சையைக் கிளப்பியது.

இந்த நிலையில் தான் தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி கிம் டே ஜங்கின் உதவியாளர் சாங் சங் மின் 'வடகொரியத் தலைவர் கிம் ஜான் உன் கோமாவில் இருக்கிறார். அதனால் வட கொரியாவின் அனைத்து அரசுப் பொறுப்புகளும் அவரது சகோதரியான கிம் யோ ஜாங்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது' என்று கூறியது சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

வடகொரிய விவகாரங்களைக் கவனித்துவரும் சர்வதேச நிபுணர்களும் கிம் இறந்திருக்கலாம் என்றே கருதுகிறார்கள். கிம் ஜான் உன்னின் தந்தை கிம் ஜான் இல் இறந்து சில மாதங்களுக்குப் பின்னர் தான் முறையாக அறிவிக்கப்பட்டது. அதைப் போலவே அடுத்த வடகொரிய ஜனாதிபதி பதவியேற்கும் போது கிம் ஜான் உன்னின் இறப்பு குறித்த செய்தி முறையாக அறிவிக்கப்படலாம் என்று கூறுகிறார்கள்.

தனது இரண்டு சகோதரர்களை ஓரம்கட்டிவிட்டு இளம் வயதுடைய கிம் ஜான் உன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினார். தற்போதுஇ வடகொரியாவின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றப்போவது யார் என்ற பரபரப்பு வடகொரியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது.

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுக்கு இரண்டு மூத்த சகோதரர்களும் ஒரு தங்கையும் உண்டு. அவர்களின் பெயர் கிம் ஜாங் நம் மற்றும் கிம் ஜாங் சோல். கிம் ஜாங் நம் 2017ஆம் ஆண்டு கோலாலம்பூர் விமான நிலையத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். 

மற்றொருவரான கிம் ஜாங் சோல் அரசியலில் இதுவரை ஆர்வம் காட்டவில்லை. கிட்டார் கலைஞரான இவர் எரிக் கிளாப்டன் இசைக்குழுவில் சேர்ந்து பணியாற்றியுள்ளார். 

கடந்த ஆண்டு இவர் வடகொரியாவுக்குத் திரும்பினார். ஆனால் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் அளவுக்கு இவருக்கு வடகொரியாவில் செல்வாக்கு இல்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

கிம் ஜாங்குக்கு குழந்தைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அவர்களின் புகைப்படங்கள் இதுவரை பொது வெளியில் வந்தது இல்லை. குழந்தைகள் சிறு வயது கொண்டவர்களாக இருப்பதால் ஆட்சி அதிகாரத்தில் அமர வைக்க முடியாத சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில் ஏற்கெனவே வடகொரியாவில் அதிகாரம் செலுத்திவரும் கிம் ஜாங் உன்னின் சகோதரியான கிம் யோ ஜாங் வடகொரியாவின் அதிகாரத்தைக் கைப்பற்றுவார் என்று கணிக்கப்படுகிறது. 

வடகொரிய மக்கள் இதுவரை பெண் ஆட்சியாளரைக் கண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வட கொரியாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களில் இவருக்குத் தொடர்புகள் அதிகம் இருப்பதால்இ அமெரிக்காவின் கறுப்புப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார் கிம் யோ ஜாங்.

தற்போதைய சூழலில்இ வட கொரியாவைப் பொருத்தவரை கிம்முக்கு அடுத்து சக்திமிக்க தலைவராகக் கருதப்படுபவர் கிம் யோ ஜாங். வடகொரியாவின் முன்னாள் ஜனாதிபதி கிம் ஜொங் இல்லின் இளைய மகள் ஆவார். 

1996 - ம் ஆண்டு முதல் 2000 ஆண்டு வரை சுவிட்சர்லாந்தில் படித்தார். வடகொரியாவின் அதிகாரமிக்கத் தலைவர்களுள் ஒருவரானஇ ராணுவத் தலைமைத் தலைவர் சூ ரியாங் - ஹோவின் இரண்டாம் மகன் சூ சாங் என்பவரை 2015 - ம் ஆண்டு ஜனவரியில் திருமணம் செய்துகொண்டார். 

இவர் 2004 - ம் ஆண்டு முதல் வட கொரியாவின் தொழிலாளர் கட்சியின் அரசியல் குழுவின் உறுப்பினராகவும் 2014 - ம் ஆண்டு முதல் வட கொரியாவின் கொள்கை பரப்பு மற்றும் கிளர்ச்சித் துறையின் துணை இயக்குநராகவும் செயல்படுகிறார். 

இவர் வட கொரியாவின் அதிகாரம் மிக்க அமைப்பான வடகொரியத் தொழிலாளர் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகவும்இ முக்கிய அரசியல் தலைவராகவும் திகழ்கிறார்.

தற்போது வட கொரியாவின் சர்வாதிகாரியான கிம் ஜாங் உன் கோமா நிலையில் இருப்பதால் கிம் யோ ஜாங்கிடம் தான் அதிகாரங்கள் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கிம் யோ ஜாங்கே அடுத்த வட கொரியாவின் தலைவராவார் என்றும் சர்வதேச அரசியல் நிபுணர்கள் மதிப்பிடுகிறார்கள்.

ஒருவேளைஇ கிம் யோ ஜாங் மட்டும் வடகொரியாவின் ஜனாதிபதியானால் தனது அண்ணன்இ தந்தை மற்றும் தாத்தாவை விடவும் தன்னை கொடுங்கோண்மைமிக்க சர்வாதிகாரியாக நிரூபிக்க விரும்புவார். 

அது வடகொரிய மக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகத் திகழப்போகிறது. அமெரிக்கா மற்றும் உலக நாடுகளுக்கும் அணு ஆயுத அச்சுறுத்தலாகத் திகழ்வார் என்றும்  சர்வதேச வல்லுநர்கள் கவலைப்படுகின்றனர்.  

'கிம் யோ ஜாங் எப்படி ஆட்சி செய்வார் என்று இதுவரை நான் பார்த்ததில்லை. ஆனால்இ அவர் இரும்புக்கரம் கொண்டு அடக்குமுறையுடன் செயல்படுவார் என்று யூகிக்கிறேன். இளம் வயதுடைய கிம் ஜாங் உன் பொறுப்பேற்ற போது அவரது தந்தையை விடவும் வடகொரியாவை வெளி உலகத்துக்குக் கொண்டுவருவார் என்று உலக நாடுகள் நம்பின. 

ஆனால்இ நடந்ததோ வேறு. தன் அண்ணனை விடவும் கிம் யோ ஜாங் இரும்புக்கரம் கொண்டு வடகொரியாவை ஒடுக்கப்போகிறார்' என்று அமெரிக்காவின் ஓய்வு பெற்றஇ முன்னாள் ராணுவ அதிகாரியான டேவி மாக்ஸ்வெல் கூறியுள்ளார். இவர் 1999 ம் தென்கொரிய விவகாரத்தைக் கவனித்துக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

0/Post a Comment/Comments

Previous Post Next Post