புலிகள் அமைப்பில் இருந்து காணாமல் போயிருந்தால் அவர்களை தேட வேண்டிய அவசியம் இல்லை - அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல - Yarl Voice புலிகள் அமைப்பில் இருந்து காணாமல் போயிருந்தால் அவர்களை தேட வேண்டிய அவசியம் இல்லை - அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல - Yarl Voice

புலிகள் அமைப்பில் இருந்து காணாமல் போயிருந்தால் அவர்களை தேட வேண்டிய அவசியம் இல்லை - அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் காணாமல் போயிருந்தால் அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கலாமெனத் தெரிவித்த அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல புலிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு நட்டஈடு வழங்குவது பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக அமையுமெனவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவித்த அவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் எவரும் காணாமல் போயிருந்தால்இ அவர்களைக் தேடவேண்டிய அவசியம் இல்லை எனத் தான் கூறியதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை எனவும் தெரிவித்தார்.

முதலில்இ காணாமல் போதல் என்பதன் வரைவிலக்கணத்தை விளங்கிக்கொள்ள வேண்டுமென்றும் கூறிய அமைச்சர்இ  காணாமல் போனவர்கள் என்று கூறுவார்களாக இருந்தால்இ அவர்களைத் தேட முடியாதென்றே அர்த்தமெனவும் சில வேளைகளில்இ அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கலாம் என்றும் கூறினார்.

ணாமல் போனவர்கள் தொடர்பில் கண்டறிவதற்காக அலுவலகத்துக்கு வழங்கப்பட்டுள்ள பெயர்களில் அரைவாசிப் பேர்இ வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது என்றும் கூறிய அமைச்சரவையின் பேச்சாளர்இ நாட்டில் யுத்தம் ஒன்று நடைபெற்றது என்பதை மறந்துவிடக் கூடாது என்றும் இராணுவம்இ புலிகள் எனஇ இரு தரப்பிலிருந்தும் காணாமல் போனவர்கள் இருக்கிறார்கள் என்றும் எனவேஇ இவர்களைத் தேடுவது பெறுமதியான விடயம்தான். ஆனால்இ காணாமல் போனவர்களைத் தேடுவதற்கென்று ஒரு முறை இருக்கிறதெனவும் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களது குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தமிழீழ விடுதலைப்புலி  உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு நட்டஈடு அல்லது நிவாரணங்களை வழங்குவதென்பது பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாகும் என்றார்.

'நீங்களை எங்களைக் கொன்றொழியுங்கள்; உங்களது குடும்பத்துக்கு நாங்கள் நட்டஈடு வழங்குகிறோம்' என்று அரசாங்கம் கூறுவதாகவே இது அமையுமென்றும் கூறிய அவர்இ தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தினருக்கு நட்டஈடு வழங்குவது சரியா? எனவும் அமைச்சர் இதன்போது கேள்வி எழுப்பினார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post