யாழில் நிலத்தை தோண்டும் போது வெளிவந்த மனித எலும்புக் கூடுகள் - Yarl Voice யாழில் நிலத்தை தோண்டும் போது வெளிவந்த மனித எலும்புக் கூடுகள் - Yarl Voice

யாழில் நிலத்தை தோண்டும் போது வெளிவந்த மனித எலும்புக் கூடுகள்

யாழ்ப்பாணம் நகரை அண்மித்த பகுதியில் தணியாருக்குச் சொந்தமான காணியில் நிலத்தை தோண்டிய போது மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது.

பண்ணையிலுள்ள மீனாட்சி அம்மன் ஆலய வீதி பகுதியிலுள்ள தனியாருக்குச் சொந்தமான காணியொன்றில் நிலம் தோட்டப்பட்டுள்ளது. இதன் போது மனித எலும்புக் கூட்டின் எச்சங்கள் இணங்காணப்பட்டுள்ளது. 

இந்தப் பிரதேசம் கடந்த காலங்களில் இரர்னுவத்தினரின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்திருந்த நிலையில் விடுவிக்கப்பட்ட பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் அந்தப் பகுதியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post