யாழில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மூவருக்கு கொரோனோ - பணிப்பாளர் தகவல் - Yarl Voice யாழில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மூவருக்கு கொரோனோ - பணிப்பாளர் தகவல் - Yarl Voice

யாழில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மூவருக்கு கொரோனோ - பணிப்பாளர் தகவல்

யாழ்.போதனா வைத்தியசாலையில் உள்ள ஆய்வுகூடத்தில் இன்று நடந்த பி.சி.ஆர் பரிசோதனையில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

முழங்காவிலில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என்றும் பணிப்பாளர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

யாழ்.போதனா வைத்திய சாலையில் உள்ள ஆய்வுகூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை 120 பேருடைய மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

குறிப்பாக போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் 2 பேர்இ வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சைபெற்ற 14 பேர்இ முழங்காவில் தனிமைப்படுத்தல் மையம் 98 பேர்இ வல்வெட்டித்துறை ஆதார வைத்தியசாலையில் 3 பேர்இ கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் 3 பேர் உள்ளிட்ட 120 பேருக்கே பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post