யாழ்ப்பாண வணிகர் கழகத்தால் யாழ் ஜெய்ப்புர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிலையத்திற்கு சக்கர நாற்காலிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
யாழ் வணிகர் கழக நிர்வாகசபை உறுப்பினர் எஸ்.ரீ.பரமேஸ்வரன் அன்பளிப்பு செய்த இரண்டு சக்கரநாற்காலிகளும்இ யாழ் வணிகர் கழகத்தால் ஒரு சக்கரநாற்காலியுமாக சேர்த்து மொத்தமாக மூன்று சக்கர நாற்காலிகள் யாழ் ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிலைய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.
யாழ் வணிகர் கழகப் பணிமனையில் நடைபெற்ற இந் நிகழ்வின் போது வணிகர் கழகத் தலைவர் உள்ளிட்ட சங்க பிரதிநிதிகளால் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment