தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு - Yarl Voice தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு - Yarl Voice

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் வல்வெட்டித்துறை நகர சபையினரால் கிருமி தொற்று நீக்கம் செயற்பாடு முன்னெடுப்பு 

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 19 ஆம் திகதி கொடியேற்றத்துடன்  ஆரம்பமாகி இடம்பெற்று வரும் நிலையில் தற்போதுநாட்டிலுள்ள  கொரோணா  தொற்று  அச்சம் காரணமாக ஆலயத்திற்கு வரும் அடியவர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி    சமூகஇடை வெளியினை பேணி  ஆலய உற்சவத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப் பட்டுள்ள நிலையில் 

ஆலயத்தில் உற்சவ காலத்தில் நாட்டின் அனைத்துப் பகுதியிலுமிருந்து அடியவர்கள் ஆலய உற்சவத்தில் கலந்து கொள்ளும் நிலையில் ஆலயப் பகுதியில் கொரோணா தொற்றினை  கட்டுப்படுத்தும் முகமாக வல்வெட்டித்துறை நகரசபையின் சுகாதார பிரிவினரால்  ஆலய பகுதியில் கிருமித் தொற்று நீக்கம் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது

 குறித்த கிருமித் தொற்று நீக்கம் செயற்பாடானது இரவு வேளைகளில் ஆலயத்தின் உட்புறம் மற்றும்வெளி  வீதிகளில் முன்னெடுக்கப்படுகிறது .

0/Post a Comment/Comments

Previous Post Next Post