நல்லூரில் தங்குமிட விடுதியொன்று பொலிஸாரால் முற்றுகை - விபச்சாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நால்வர் கைது - Yarl Voice நல்லூரில் தங்குமிட விடுதியொன்று பொலிஸாரால் முற்றுகை - விபச்சாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நால்வர் கைது - Yarl Voice

நல்லூரில் தங்குமிட விடுதியொன்று பொலிஸாரால் முற்றுகை - விபச்சாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நால்வர் கைது

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய முன்வீதியில் அமைந்துள்ள தங்குமிட விடுதி 
ஒன்றில் விபசாரத்தில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தில் இரண்டு தென்னிலங்கை பெண்கள் மற்றும் இரு இளைன்னர்களும் யாழ்ப்பாணம் பொலிசாரால் நேற்று இரவு கைது 
செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது...

நல்லூர் ஆலய முன்வீதியில் அமைந்துள்ள தங்குமிட விடுதியில் விபச்சார 
நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக யாழ்ப்பாணம் பொலிசாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

இதன் அடிப்படையில் யாழ்ப்பான தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் குறித்த தங்குமிட விடுதியை முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது குறித்த தங்குமிட விடுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் 
தங்கியிருந்த இரண்டு தென்னிலங்கை பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் இரண்டு இளைன்னர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்கள் 20-25  வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் கொழும்பு மற்றும் புத்தளம் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் பொலிசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை 
யாழ்ப்பாணம் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
--

0/Post a Comment/Comments

Previous Post Next Post