உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல் குறித்து விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் 10 மணிநேர விசாரணையை நடத்தியுள்ளது.
கொழும்பு 7இல் அமைந்திருக்கும் மஹமகசேகர மாவத்தையிலுள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு ஆணைக்குழு அதிகாரிகs; விஜயம் செய்தனர்.
விசாரணைகளுக்காக ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதிக்கு ஆணைக்குழு திகதி குறிப்பிட்டு அழைப்பு விடுத்திருந்தது.
இந்த நிலையிலேயே காலை உத்தியோகபூர்வ இல்லத்திற்கே சென்று அவரிடம் வாக்குமூலத்தைப் பதிவுசெய்துகொண்டுள்ளது.
Post a Comment