ஹெரோயின் போதைப் பொருளுடன் இளம் பெண் ஒருவர் யாழில் கைது - Yarl Voice ஹெரோயின் போதைப் பொருளுடன் இளம் பெண் ஒருவர் யாழில் கைது - Yarl Voice

ஹெரோயின் போதைப் பொருளுடன் இளம் பெண் ஒருவர் யாழில் கைது



யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் யாழ்ப்பாண மதுவரித் திணைக்கள அதிகாரிகளினால் 185mg ஹேரோயின் போதைப்பொருளுடன் அதே இடத்தைச் சேர்ந்த 
18 வயதுடைய பெண்ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்


இன்று 21.09.2020 மதுவரி திணைக்கள அதிகாரிகளிற்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து குறித்த நபர் யாழ்  கொழும்புத்துறை பகுதியில்  கேரோயினைமறைத்து வைத்திருந்த வேளையில் மதுவரித் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் முற்படுத்தநடவடிக்கை எடுத்துள்ளனர்

மதுவரி உதவி ஆணையாளர் வடமாகாணம் பிரபாத் ஜெயவிக்கிரவின் வழிநடத்தலின் கீழ் யாழ்ப்பாண மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி ரகுநாதன் தலைமையிலான
சக மதுவரிபரிசோதகர்  V.ரசிகரன்  மற்றும் EG 1026 V.அனுஷன் FEG 67 T. வாசுகி ஆகியோர் கொண்ட குழு அணியினரால் குறித்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது

அண்மைய நாட்களில் யாழ்ப்பாண குடாநாட்டில் பல்வேறு இடங்களில் ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப் பொருட்கள் முப்படையினர் மற்றும் மது வரித்திணைக்களத்தினரால்  கைப்பற்றப்பட்டுள்ளது

0/Post a Comment/Comments

Previous Post Next Post