பாதுகாப்பை உறுதி செய்யாத கொரோனா தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாது -உலக சுகாதார அமைப்பு - Yarl Voice பாதுகாப்பை உறுதி செய்யாத கொரோனா தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாது -உலக சுகாதார அமைப்பு - Yarl Voice

பாதுகாப்பை உறுதி செய்யாத கொரோனா தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாது -உலக சுகாதார அமைப்பு




குறைந்தபட்ச செயற்திறன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யாத எந்தவொரு கொரோனா தடுப்பூசியும் மிகப்பெரிய அளவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ரஷ்யா சீனா அமெரிக்கா பிரித்தானியா இந்தியா போன்ற உலகின் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையில் இங்கிலாந்து நாட்டின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி பக்கவிளைவுகளை ஏற்படுத்தியதால் பரிசோதனை பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

ஒக்ஸ்போர்ட் தடுப்பூசியின் பரிசோதனைகளை இங்கிலாந்து அமெரிக்கா பிரேசில் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. இதனால் கொரோனா தடுப்பூசியை உருவாக்குவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

எனினும் ரஷ்யாவின் 'ஸ்புட்னிக் வி' தடுப்பூசியின் இறுதிக்கட்ட பரிசோதனை இன்று ஆரம்பமாகிறது. இந்த இறுதிகட்ட பரிசோதனையில் 31 ஆயிரம் பேருக்கு இந்த தடுப்பூசி செலுத்தி சோதனை செய்யப்படவுள்ளது.

பல நாடுகள் பல்வேறு கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கி வரும் நிலையில் அதன் பாதுகாப்பு குறித்த அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில்இ குறைந்தபட்ச பாதுகாப்பை உறுதி செய்யாத எந்த ஒரு கொரோனா தடுப்பூசியும் மிகப்பெரிய அளவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாது என உலக சுகாதார அமைப்பின் முதன்மை ஆராய்ச்சியாளர் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸுக்கான தடுப்பூசிகள்  மனித சமூகத்திற்கு என்னென்ன செய்துள்ளன என்பதை ஒருங்கிணைத்து பார்க்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்புஇ உலக நாடுகளின் அரசுகள்இ உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றிற்கு நம்பிக்கை அளிக்காத எந்தவொரு கொரோனா தடுப்பூசியும் மிகப்பெரிய அளவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பூசியின் அளவுகோள் மற்றும் தடுப்பூசியின் திறனை ஆராய தாங்கள் மிகவும் விரிவான மற்றும் முழுமையான செயன்முறையை கொண்டுள்ளதாகவும் இந்த அளவுகோள்களை பூர்த்தி செய்யும் தடுப்பூசிகளையே தாம் பரிந்துரை செய்வோம் என்றும் உலக சுகாதார அமைப்பின் முதன்மை ஆராய்ச்சியாளர் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post