20 ஆம் திருத்தம் தொடர்பில் எத்தகைய நடவடிக்கையை எடப்பது என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆராய உள்ளதாகத் தெரிவித்துள்ள தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா இந்த வாரத்திற்குள் கூட்டமைப்பின் நிலைப்பாடு வெளிப்படுத்தப்படுமென்றும் கூறியுள்ளார்.
ஆட்சிக்கு வந்தள்ள புதிய அரசாங்கம் 20 ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்த திருத்தமானது பல பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கின்றது. ஆகையினால் இதனை கூடு;டமைப்பு ஏற்றுக் கொள்ளாது.
அத்தோடு இதனை எதிர்க்கின்ற நடவடிக்கையையே முன்னெடுக்கும்.
மேலும் இந்தவாரத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் கூடப்பட இருக்கின்றது.
இதன் போதே 20 தொடர்பில் கூட்டமைப்பு எத்தகைய முடிவுகளை எடுப்பது என்பது தொடர்பில் ஒரு தீர்மானமொன்றை எடுக்கும் என்றார்.
Post a Comment