கொரோனாவால் நிறுத்தப்பட்ட கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் இன்று முதல் ஆரம்பம் - கல்வி அமைச்சு அறிவிப்பு - Yarl Voice கொரோனாவால் நிறுத்தப்பட்ட கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் இன்று முதல் ஆரம்பம் - கல்வி அமைச்சு அறிவிப்பு - Yarl Voice

கொரோனாவால் நிறுத்தப்பட்ட கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் இன்று முதல் ஆரம்பம் - கல்வி அமைச்சு அறிவிப்பு


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஆரம்பப் பிரிவு உள்ளிட்ட சகல தரங்களினதும் கல்வி நடவடிக்கைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வழமைப்போல் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில்இ காலை 7.30 மணி முதல் பகல் 1.30 மணி வரை வழமையான நேரத்தில் கல்வி நடவடிக்கைகள் நடைபெறும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலைகளில் மாணவர்கள் சுகாதார நடைமுறைகளை தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும் எனவும் கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது

நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக மட்டுப்படுத்திருந்த பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் கடந்த செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

சிரேஸ்ட தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் அன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில்இ இன்று முதல் ஆரம்பப் பிரிவுகளுக்கான கல்வி நடவடிக்கைகளும் வழமைப்போல் இடம்பெறவுள்ளன.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டதையடுத்துஇ கடந்த மார்ச் மாதம் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

அதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸின் தாக்கம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்துஇ மாணவர்களின் சுகாதார நிலைமைகளை கருத்திற்கொண்டு பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டன.

அதேநேரம் நேரங்களிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதற்கமைய தரம் 10-13 ஆகிய வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தினமும் காலை 07.30 மணிமுதல் பிற்பகல் 3.30 மணிவரை முன்னெடுக்கப்பட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post