மகாத்மா காந்தியின் பிறந்த தின நிகழ்வில் திரண்ட தமிழ் அரசியல் பிரமுகர்கள் - Yarl Voice மகாத்மா காந்தியின் பிறந்த தின நிகழ்வில் திரண்ட தமிழ் அரசியல் பிரமுகர்கள் - Yarl Voice

மகாத்மா காந்தியின் பிறந்த தின நிகழ்வில் திரண்ட தமிழ் அரசியல் பிரமுகர்கள்




மகாத்மா காந்தியின் 151 ஆவது பிறந்த்தினம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ் போதனா வைத்தியசாலை முன்பாக அமைந்துள்ள காத்தியடிகள் நினைவு தூபியில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாடடில் நடைபெற்ற இந் நிகழவில் காந்தியின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதன் போது இந்திய துணைத் தூதுவர் கே. பாலசந்திரன், மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அரசியல் பிரமுகர்கள் கல்விமான்கள் மத்த் தலைவர்கள் என பலரும் மலர் மாலை அணிவித்து மலரஞ்ஞலி செலுத்தினர்.

இந் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்ளான சுரேஸ் பிரேமசந்திரன், சரவணபவன், சிவாஜிலிங்கம், மாகாண சபை அவைத் தலைவர் சிவஞானம், முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன், எதிர்கட்சி தலைவரின் இணைப்பு செயலாளர் உமாசந்திரா பிரகாஷ், யாழ் பல்கலைகழக துணைவேந்தர் சிறிசற்குணராசா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது காந்திய வழியை பின்பற்றியதாக மாணவி ஒருவருலை கௌரவித்து துணைதூதுவரால் பாரிசிலும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.




0/Post a Comment/Comments

Previous Post Next Post