பாடசாலை மாணவர்களுக்கு யாழில் ஊடக செயலமர்வு - Yarl Voice பாடசாலை மாணவர்களுக்கு யாழில் ஊடக செயலமர்வு - Yarl Voice

பாடசாலை மாணவர்களுக்கு யாழில் ஊடக செயலமர்வு




யாழ் மாவட்டத்தில் தொடர்பாடலும் ஊடக கற்கையும் பாடநெறியினை கற்றுக்கொண்டிருக்கும் பாடசாலை மாணவர்களுக்கான வெகுசன ஊடக செயலமர்வு ஒன்று தற்போது யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்று வருகின்றது.

ஊடக அமைச்சு மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தலைமையில் குறித்த செயலமர்வு இடம்பெற்று வருகின்றது.

நிகழ்வில் புத்தசாசன, மத விவகார மற்றும்  கலாசார அலுவல்கள் அமைச்சின் ஊடக செயலாளர் யோகராஜன், அரசாங்க தகவல் திணைக்கள உதவிப் பணிப்பாளர் எல்.பி.திலகரத்ன, யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், ஆசிரியர்கள் மற்றும்  மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

செயலமர்வின் நிறைவில் மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post