யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி ஆசிரிய மாணவர்கள் வெளியேற்றம் - தனிமைப்படுத்தல் நிலையமாக கல்லூரி மாற்றம் - Yarl Voice யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி ஆசிரிய மாணவர்கள் வெளியேற்றம் - தனிமைப்படுத்தல் நிலையமாக கல்லூரி மாற்றம் - Yarl Voice

யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி ஆசிரிய மாணவர்கள் வெளியேற்றம் - தனிமைப்படுத்தல் நிலையமாக கல்லூரி மாற்றம்




யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்று வந்த 375 ஆசிரிய மாணவர்கள்  அவர்களது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.

கோப்பாய் இராசபாதையில் அமைந்துள்ள தேசியக் கல்வியற் கல்லூரி மாணவர் விடுதி தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றப்பட உள்ளதன் காரணமாக மாணவர்களை அவர்களது வீடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கையினை இன்றைய தினம்  நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

அதனடிப்படையில் அந்தந்த மாவட்டங்களுக்கு உரியவர்கள் தனித்தனியான பேருந்தில்  சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கையினை கல்லூரி நிர்வாகம் இராணுவத்துடன் இணைந்து முன்னெடுத்துள்ளது.

இன்று திங்கட்கிழமை காலையில்  சுமார் எட்டு பேருந்துகளில் 71 ஆண் ஆசிரிய மாணவர்களும் 304 பெண் ஆசிரிய மாணவர்களும்  அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


அத்தோடு  கல்லூரியானது தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றுவதற்கு இராணுவத்தினரால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.


நேற்றைய தினம் வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத


யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்று வந்த 375 ஆசிரிய மாணவர்கள்  அவர்களது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.

கோப்பாய் இராசபாதையில் அமைந்துள்ள தேசியக் கல்வியற் கல்லூரி மாணவர் விடுதி தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றப்பட உள்ளதன் காரணமாக மாணவர்களை அவர்களது வீடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கையினை இன்றைய தினம்  நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

அதனடிப்படையில் அந்தந்த மாவட்டங்களுக்கு உரியவர்கள் தனித்தனியான பேருந்தில்  சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கையினை கல்லூரி நிர்வாகம் இராணுவத்துடன் இணைந்து முன்னெடுத்துள்ளது.

இன்று திங்கட்கிழமை காலையில்  சுமார் எட்டு பேருந்துகளில் 71 ஆண் ஆசிரிய மாணவர்களும் 304 பெண் ஆசிரிய மாணவர்களும்  அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


அத்தோடு  கல்லூரியானது தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றுவதற்கு இராணுவத்தினரால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.


நேற்றைய தினம் வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post