யாழிலும் கிளிநொச்சியிலும் கொரோனா தொற்று சிகிச்சை மருத்துவமனைகள் - Yarl Voice யாழிலும் கிளிநொச்சியிலும் கொரோனா தொற்று சிகிச்சை மருத்துவமனைகள் - Yarl Voice

யாழிலும் கிளிநொச்சியிலும் கொரோனா தொற்று சிகிச்சை மருத்துவமனைகள்



யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் கொரோனா தொற்றுக்குள்ளாகும் நோயாளர்களுக்கு மருதங்கேணியிலும், கிளிநொச்சியில் கிருஷ்ணபுரத்திலும் கொரோனா மருத்துவமனைகள் சுகாதார அமைச்சால் அமைக்கப்படுகிறது. இவை அடுத்த சில நாட்களில் பணிகள் பூா்த்தியாகவுள்ளது.

மருதங்கேணி சிகிச்சை நிலையம் எதிர்வரும் 19 ஆம் திகதி பூர்த்தியாகும் என தெரிவிக்கப்படுகிறது. 

கிருஷ்ணபுரத்தில் அமைக்கப்படும் சிகிச்சை நிலையம்  2 வாரங்களில் பூர்த்தியாகவுள்ளது.  மருதங்கேணி வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு பிறிதொரு கட்டிடத்திற்கு மாற்றப்பட்டிருக்கின்றது.

தமிழீழ விடுதலை புலிகளின் பயிற்சி நிலையம் அமைந்திருந்த வளாகத்தில் இந்த மருத்துவமனை அமைக்கப்படுகின்றது. 

சுமார் 100 படுக்கைகள் கொண்டதாக இந்த கொரோனா சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்படுகிறது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post