இந்தியா சென்று வந்த மூவர் கைது - கஞ்சா பொதிகளும் மீட்பு - தனிமைப்படெத்த நடவடிக்கை - Yarl Voice இந்தியா சென்று வந்த மூவர் கைது - கஞ்சா பொதிகளும் மீட்பு - தனிமைப்படெத்த நடவடிக்கை - Yarl Voice

இந்தியா சென்று வந்த மூவர் கைது - கஞ்சா பொதிகளும் மீட்பு - தனிமைப்படெத்த நடவடிக்கை




இந்தியா சென்று வந்த மூவர் படகுடன்  கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து கஞ்சா பொதிகளையும் மீட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

பருத்தித்துறை கடற்ப்பரப்பில், மூவர் படகுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இவர்கள் மூவரும் தமிழ்நாடு சென்று வந்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் கடற்படையினரை கண்டதும் கஞ்சாப் பொதியை கடலில் தள்ளிவிட்டு தப்பித்த வேளை மூவரும் கைது செய்யப்பட்டதாகவும் 80 கிலோ கஞ்சாவையும் மீட்டுள்ளதாகவும் கடற்படையினர் கூறியுள்ளனர்.


இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது, இதனையடுத்து மூவரும் தனிமைப்படுத்தலுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


0/Post a Comment/Comments

Previous Post Next Post